Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 291


எட்டவன் திசையை நீபாரு--மாதே
யெட்டைந்தில் கேந்திர கோணங்களேற
சட்டமாயிவனுக்கு செப்பு--சிறை
காவலும் துன்பமும் யோகம் சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இனி, ஆயுள் ஸ்தானாதிபதியான எட்டுக்குடையவன் திசையைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக! இவ்வெட்டுக்குடையவன், 8,5,1,4,7,10,9 ஆகிய இடங்களில் தேறி நிற்க இச்சாதகனுக்கு சட்டப்படி சிறைக்காவல் உண்டெனினும் யோகம் உண்டென்று நன்கு ஆராய்ந்து கூறுவாயாக எனப்போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment