Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 279


பாடினே னின்ன மொன்று பகரக்கேளு
பகலவனுஞ்சனி செவ்வாய் கொடியோராவர்
தேடினேன் யெட்டாறு பன்னிரெண்டும்
திடமான கேந்திரமும் வலுமையப்பா
நாடினேன் நல்லோர்கள் கோணம் நட்பு
நற்பொருளுங் கீர்த்தியுண்டு நலமாய்வாழ்வன்
ஆடினேன் அயன் விதியும் தீர்க்கம் தீர்க்கம்
அப்பனே புலிபாணி அரைந்திட்டேனே


மேலும் ஒரு கருத்தையும் கூறுவேன். அதை நன்கு உணர்ந்து கேட்பாயாக! சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் கொடியோரேயாவர், மற்றும் 8,6,12,1,4,7,10 ஆகிய இடங்கள் வலிமையான இடங்களேயாகும்,. நல்ல கிரகங்கள் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருப்பின் அதுவும் நட்புடன் காணப்படின் நற்பொருள், கீர்த்தி ஆகியவையும் கொண்டு நலமான முறையில் வாழ்வான். அச்சாதகனின் விதியானது தீர்க்கமானதே என்று தீர்க்கமான எண்ணத்துடன் எனது குருநாதரான போகரின் பேரருட்கருணை துணைகொண்டு புலிப்பாணி உரைத்தேன்

No comments:

Post a Comment