Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 276 - சுக்கிர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்


ஆமென்ற சுக்கிரதிசை புதனார்புத்தி
அன்புடைய மாதமது முப்பத்தினாலு
நாமென்ற அதன்பலனை நவிலக்கேளு
நாடுநகர் உன்வசமே ஆகும்பாரு
தானென்ற தன்னரசு ஆண்டுநீயும்
தரணியில் நீயுமொரு தவசியாவாய்
போமென்ற பொன்முதலும் பூமியாண்டு
பொங்கமுடன் தானிருந்து அரசு ஆள்வாய்


சுக்கிர மகாதிசையில் புதபகவானின் ஆதிக்க காலம் 2 வருடம் 10 மாதஙகளும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களைக் கூறுவோம் தெளிவாகக் கேட்பாயாக! நாடு நகரம் வசமாகும். தன்னிகரில்லாத அரசனெனஆட்சி புரியும் நிலை ஏற்படும். முடிவில் இந்நிலவுலகில் தவத்திற் சிறந்த தவசியாதலும் நேரும். கைவிட்டுப்போம் என்று சொல்லத்தகும் பொன் முதலாகிய பொருள்களையும் பூமி லாபத்தையும் பெற்று அரச செல்வமெய்தி ஆண்டிருக்கும் நிலை ஏற்படும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment