Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 273 - சுக்கிர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


பாரப்பா சுக்கிரதிசை ராகுபுத்தி
பகையான மாதமது முப்பத்தாறாம்
சேரப்பா அதன் பலனை செப்பக்கேளு
சிரரோகம் காமாலை ஜெயமும்நோவாம்
ஆரப்பா அரசர்பகை அகமிருந்துமாமே
அன்பான தாய் தந்தை அடவுடனே சாவாம்
மேரப்பா மேகமதால் ரோகமுண்டாம்
மேலெல்லாம் சிரங்குகுட்டம் ஆவான்பாரே


சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் 3 வருடங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: சிரரோகம், காமாலை, சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும், அபமிருந்து தோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும். மேலும் மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்கு, குட்டம் போன்ற நோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment