Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 268 - கேது மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்


பாரப்பா கேதுதிசை புதனார்புத்தி
பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்தியேழு
சேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டுநின்ற மயக்கம் போய்நீ
மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்துகொள்வாள்
தீங்கில்லா மனக்கவலையில்லை காணே


கேது மகாதிசையில் புதன் பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாய்! இதுவரை பற்பல இன்பங்களில் வயப்பட்டு மயங்கிய நிலை மாறி இந்நிலவுலகில் இச்சாதகனை எல்லாரும் ஒரு சிறந்த மனிதன் என்று கூறத்தக்க நிலை உண்டாகும். திருமகள் இவன் மனையை விரும்பிச் சேர்வாள். எனவே தீங்கொன்றும் நேராது எவ்வித மனக்கவலையும் இல்லாதொழியும் எனப் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment