Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 259 - புதன் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


பாரப்பா புதன் திசையில் சனியின்புத்தி
பாழான மாதமது முப்பத்திரண்டு
சேரப்பா நாளதுவும் ஒன்பதாகும்
செலுத்துகிற பலணாபுhஊவே செப்பக்கேளு
வீரப்பா சத்துருவால் சூனியமுண்டாம்
விதியில்லா நோய்போலே விதங்கேடுபண்ணும்
மாரப்பா மனைவியரும் புத்திரரும் தானும்
மரணமாம் உன்னுடலு மரணமாமே


புதமகா திசையில் சனிபகவான் புத்திக்காலம் 2 வருடம் 8 மாதம் 9 நாள்களாகும். இவர் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: பலமுள்ள சத்துருக்கள் இச்சென்மனுக்குச் சூன்யம் வைப்பர். உயிர்கொல்லி நோயைப் போல இருந்த நிலை சிதைந்து கேடுற நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும் என்று போகரது அருட்கருணையால், புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment