Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 229 - இராகு மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி
கணக்கான மாதமது ஆறாறாகும்
கோணவே அதன்பலனைச் சொல்லக்கேளு
தோகையர்கள் தன்னாலே சுகமாகும் பாரு
பூணவே பூமிமுதல் பொருளுஞ்சேரும்
புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும்
ஊனவே வியாதியது பீடிப்பாகும்
உடன்கேடு வேந்தனால் கலகமாமே.


இராகு திசையில் சுக்கிர பகவான் பொசிப்புக் காலம் 3 வருடங்களாகும். இக்காலத்தில் சாதகனுக்கு நிகழும் பலன்களாவன: மயில் போலும் சாயலையுடைய பெண்களால் இன்பம் விளையும். பூமி லாபம் ஏற்படுதலும் நிறைவான பொருட் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுப சந்தோஷங்களும் ஏற்படும். எனினும் வியாதி பீடிப்பதும் அதன் காரணமாகக் காரியக்கேடு ஏற்படுதலும், அரசனால் கலகம் விளையும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment