Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 202 - சூரிய மகாதிசை, சனி புத்திப் பலன்கள்




வணங்குவார் ரவிதிசையில் சனிபுத்திகேளு
வாக்கிலா நாளதுவும் மாதம்பதினொன்று
இணங்குவார் நாளதுவும் முன்னான்காகும்
இதனுடைய பலத்தையினி யியம்பக்கேளு
குணங்குவார் சத்துருவும் மன்னவருந்தானும்
குலைபொருளுஞ் சேதமே ஆக்கிவைப்பார்
பிணங்குவார் பிதிருமா ரகமேயாவர்
பிலன்கேடு பண்ணிவைப்பான் சனியன் தானே


வணங்குவதற்குரிய இரவியின் திசையில் இவனது மகனான சனிபகவானின் பொசிப்புக்காலம் பதினொரு மாதம் பன்னிரெண்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவன: மனம் வேறுபட்ட சத்துருக்களாலும் அரச பீடையாலும் பெருந் தனக்கேடு ஏற்படும். அதேபோல் பிதுர் மரணமும் எதிர்பாராவண்ணம் ஏற்படும்.கெடுதியான பலன் களையே சனிபகவான் ஏற்படுத்திவைப்பார் என்று கூறுக என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment