Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 177


கேளப்பா பண்டிதனே குறிப்புசொல்வேன்
கெவுனமுள சித்தர்களும் பிரித்துசொல்வார்
ஆளப்பா அம்புவியில் பிறந்தோர்க்கெல்லாம்
அவரவர்கள் ஜெனித்த ஜாதகத்தைப் பார்த்து
நாளப்பா திசைபார்த்து ஊணும் பார்த்து
நடந்த்¢டுமக் காலத்தின் சித்ரமும்பார்த்து
கேளப்பா கிரகத்தின் நாடிக்கேத்த
கொடுத்திடுவாய் பிணிமருந்துகுறித்திட்டேனே.


பண்டிதன் என்று உலகறியக் கூறிக் கொள்ளும் ஜோதிடனே! என்னுடைய குறிப்பையும் நீ நன்குணர்ந்துகேட்பாயாக! மிகவும் கவனமுள்ள பதினெண் சித்தர்களும் இதனை நன்கு பிரித்துப் பலன் கூறும் பண்பு வாய்ந்தவர்கல். எனினும் அவர்கள் இத்னை வெளிப்படையாகச் சொல்லார். ஆனால் இந்நிலவுலகில் அவதரித்தவர்களுக்கெல்லாம் அவரவர் ஜெனித்த ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்கு நடக்கும் திசா புத்திகளையும் நன்கு ஆராய்ந்து அக்கிரகங்களின் பொசிப்பினையும் உனர்ந்து அன்று நடக்கும் சித்திரமும் கண்டு அவ்வக்கிரகத்தின் நாடிக்கேற்ற பிணிக்குரிய மருந்தினையும் நீ கொடுத்திடல் வேண்டும் என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment