Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 150


பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பானுமைந்தன் பால்மதிக்கி வாக்கில் வந்தால்
சீரப்பா மேம்பாடு சவுக்கியம் செம்பொன்
சிவசிவா கிட்டுமடா வேட்டல் கூடும்
கூறப்பா கோதையினால் பொருளுஞ்சேரும்
கொற்றவனே குடிநாதன் வலுவைப்பாரு
ஆரப்பா போகருட கடாட்சத்தாலே
அப்பனே புலிப்பாணி அரைந்திடேனே.


வேறொரு விவரத்தையும் கூறுகிறேன். அதனையும் நன்கு நீ கேட்பாயாக! சூரியபுத்திரனான சனிபகவான் சந்திரனுக்கு வாக்கு ஸ்தானத்தில் வந்தால் மிகவும் சீரே ஏற்படும். மேம்பாடான வாழ்க்கையும் செளபாக்கியமும் செம்பொன்னும் சிவபரம் பொருளின் அருளாணையால் கிட்டுவதோடு அச்சாதகனின் எண்ணம் நிறைவேறுதலும் நேரும்., மற்றும் பெண்களால் தனலாபம் ஏற்படும். எனினும் இலக்கினத்ததிபனின் பலத்தையும் கிரக நிலவரத்தையும் ஆய்ந்து திசாபுத்திகளையும் தெரிந்து பலன் கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன

No comments:

Post a Comment