Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 132


பாரப்பா பாக்கியமும் ஆறோன் வீட்டில்
பகருகின்ற சனியோடு வெய்யோன்மேவ
கூறப்பா குழவிக்கு பாக்கியமுண்டு
குவலயத்தில் பிரசங்கி செய்யுளுள்ளோன்
வீரப்பா மற்றவிடந் தனிலே நிற்க
வினோ தகனாம் கூத்தாடி வேடக்காரன்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
செயலறிந்து புவியோர்க்கு செப்புவாயே


மேலும் ஒரு கருத்தினைச் சொல்லுகிறேன் கருத்துடன் கேட்பாயாக! பாக்கியாதிபதி என்று பகரப்படும் ஒன்பதுக்குடையவனும் ஆறாமிடத்தில் சனியுடனும் சூரியனுடனும் சேர அச்செல்வனுக்கு பாக்கியமேயுண்டாகும். அவன் இந்நிலவுலகில் நல்ல பிரசங்கியாகத் திகழ்வான். மற்ற இடங்களில் இவ்வாறு நின்றாலும் அவன் வினோதம் மிக்கவனாகவும், கூத்தாடியாகவும், வேடக்காரனாகவும், விளங்குவான்என்று போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment