Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 119


ஆரப்பா யின்னமொரு சேதிகேளு
அப்பனே ஆறோனும் கேந்திர கோணம்
சீரப்பா ஜென்மனுக்கு இராஜ தோஷம்
செப்புகிறேன் சோரர்பயம் சோரத்தால் துன்பம்
கூறப்பா குடும்பத்தில் களவும் போகும்
கூச்சலிட்டு வெளிவருவள் குமரிதானும்
வீரப்பா விஷயமுநீ வெடியால் துன்பம்
விளையுமடா பலதுன்பம் இன்னம்கேளே


இன்னுமொரு கருத்தினையும் உனக்குக் கூறுகிறேன். அதனையும் நன்கு கவனிப்பாயாக! இலக்கினத்திற்கு 6க்குடையவன் கேந்திரஸ்தானத்தில் (1,4,7,10) இருந்தால் அச்சென்மனுக்கு அரசதோஷம் மற்றும் திருடர் பயம், சோரம் போவதால் துன்பம் விளைதல், குடும்பத்தில் களவு போதல், வீட்டில் சண்டையும், குமரிப்பெண் கூச்சலிட்டு வெளிவருதலும், விஷபயமும், வெடி முதலியவற்றால் துன்பமும் இன்னும் இது போன்ற பல துன்பங்களும் ஏற்படும் என்று போகரது ஆணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment