Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 115


பாரப்பா யின்னமொன்று பகரக்கேளு
பரமகுருபால் மதியும் வெள்ளிமூவர்
சீரப்பா ஜென்மனுக்கு அஞ்சில் தோன்ற
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வான்
கூறப்பா குரு விருந்தால் புத்திரரற்பம்
குளிர்ந்தமதி தானிருந்தால் பெண்ணதாகும்
வீரப்பா வெள்ளிநின்றால் யோகம் மெத்த
விளம்புவாய் புவியோர்க்கு உலகின்கண்ணே


நான் கூறுகின்ற இன்னொரு கருத்தையும் நீ ஆழ்ந்து காண்க. தேவகுருவும் சந்திரனும் அசுரகுருவும் ஆகிய மூவரும் இலக்கினத்திற்கு ஐந்தில் நிற்க அச்சாதகன் இந்நிலவுலகில் மிகச் சிறப்புடன் வாழ்பவன் ஆவான்; அதே போல் ஐந்தில் குருதனித்திருக்க புத்திரர்கள் அற்பம் என்றும் சந்திரன் தனித்திருக்க பெண்சந்தானம் என்றும் இப்புவியோர்க்குக் கூறுக, போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment