Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 110


செப்புவாய் சந்திரனும் ஈராறோனும்
சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து
அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில்
அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும்
ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க
ஓகோகோ ஆகாச கரணம்போட்டு
தப்புவாய் தரணி தனில் கீழேவந்து
தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே.


புகழ் பெற்ற சந்திரனும் இலக்கினத்திற்குப் ப்ன்னிரண்டுக் குடையவனும் சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் ஐந்தாமிடத்தோனும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க. இச்சாதகன்,நீர் மீதும், ஆகாச மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ்வந்து மன்னர் முதலான மற்றையோரின் பரிசில்களைப் பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment