Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 106


செய்யப்பா யின்னமொரு சேதிகேளு
செயலாக நிதிகரும னிருவர்கூடி
கையப்பா கண்ணுற்று நோக்கினாலும்
கனமுள்ளோ ரிருவருமே மாறினாலும்
அய்யப்பா அகம்பொருளும் நிலமுஞ்செம்பொன்
அப்பனே கிட்டுமடா ஜென்மனுக்கு
உய்யப்பா போகருடா கடாசத்தாலே
உத்தமனே புலிப்பாணி உரைத்தோம்னமே


சீர்த்தி மிகுந்தவனே, நீ இன்னுமொரு சேதியினையும் கேட்பாயக! இரண்டிற்குடையவனும் பத்துக்குடையவனும் கூடி இருப்பினும் அல்லது ஒருவரை ஒருவர் கண்ணுற்று நோக்கினாலும் அல்லது இவன் வீட்டில் அவனாக மாறி நிற்பினும் அச்சாதகனுக்கு அகமும், பொருளும், நிலமும், செம்பொன்னும் வெகுவாகக் கிடைக்கும். போகருடைய கடாட்சத்தால் உய்க என்றே அவருடைய மாணாக்கனாகிய புலிப்பாணி உரைத்தேன்.

No comments:

Post a Comment