Tuesday 4 September 2012

அரசாங்கத்தில் உயர் பதவிக்குண்டான வேலை வாய்ப்பு கிடைக்குமா


அரசாங்க உத்தியோகம் என்பது பொதுவாக படித்த இளைஞர்களிடம் உள்ள ஒரு குறிக்கோள் என்று சொல்லலாம்.. அரசாங்க உத்தியோகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர் நிலை வரை எத்தனையோ பதவிகள் உள்ளன பதவிகளில் நிலைகளில் மேலே செல்ல செல்ல சம்பளமும் .அதிகம். அதற்க்கு தகுந்தாற்போல் வசதி வாய்ப்புகளும் அதிகம்.

தற்போது இந்தியாவில் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் சூழ்நிலையில்
உயர் பதவிக்கான வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. தினம் தோறும் உயர் பதவிக்கான வேலை வாய்ப்புக்கான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஜோதிடரீதியாக பார்த்தோம் என்றால் ஒருவருக்கு அரசாங்கத்தில் உயர் பதவிக்குண்டான வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதை அவர் பிறக்கும் போது அமைந்த கிரகங்களின் அடிப்படையை வைத்து தீர்மானித்து .விடலாம்.

உயர் பதவி கிடைப்பதுக்கு உண்டான அமைப்பு பிறக்கும்போது நின்றிருந்த கிரகங்களின் அடிப்படையில் .இருக்கும். நல்ல இடத்தில நிலைகொண்டிருந்து, நல்லவர்களின் பார்வை பெற்று, நல்லவர்களுடைய கூட்டணி பெற்று இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவிக்குண்டான வேலை வைப்பு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு .இருக்கின்றது.

சிலர் படிப்பில் நல்ல கெட்டிகாரர்களாக .இருப்பார்கள். பொது அறிவு விசயத்திலும் நல்ல அறிவாளிகளாக .இருப்பார்கள். ஆனால் பல முறை முயற்சி செய்தும் பல பரிட்சைகள் எழுதியும் உயர் பதவிகுண்டான வேலை வாய்ப்பு என்பது அவர்களை பொறுத்தவரை ஒரு கனவாகவே இருக்கும். வேலை வாய்ப்பே அவர்களுக்கு .கிடைக்காத சூழ்நிலை? இதற்க்கு காரணம்.

அவர்களுடைய பிறப்பு ஜாதகத்தில் அமைந்த சில கெட்ட அமைப்புகள் காரணமாக இருக்கும். அவை என்ன என்று கண்டறிந்து கெட்ட அமைப்புகளை
பலவீனமடையசெய்து அவர்களுடைய கனவை .நனவாக்கலாம்.

No comments:

Post a Comment