Sunday 12 August 2012

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?



ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள்.

காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணி க்க முடியும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான்காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போ ன்ற சம்பவங்கள் ஏற்படும்.

பொதுவாக எந்த லக்னம் /ராசி யாக இருந்தாலும், களத்திர ஸ்தா னம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணம் அமையு ம் எனக் கூற வேண்டும். ஒருவரு க்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவ கிரகங்களின் பார்வை /சேர்க் கை இல் லாமல் இருந்தால் அவருக்கு பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.

களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இரு ந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திரு மணம் நடைபெறும்.


No comments:

Post a Comment