Sunday 12 August 2012

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!




ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதைசிவ ன், தானியம்கோதுமை, வஸ் திரம்சிவப்பு, புஷ்பம்செந்தா மரை, ரத்தினம்மாணிக்கம், உலோகம்தாமி ரம்.

திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜ னம் அளிப்பது விசே ஷம். சந்திரனுக் குரிய தேவதைதுர்க் கா தேவி தானியம்நெல், வஸ்திரம்வெள்ளை, புஷ்பம்வெள்ள ரளி, ரத்தி னம்முத்து, உலோகம்ஈயம்.

செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோ ஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க் கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சும ங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம் பூலம் கொடு க்கலாம். செவ்வாய்க்குரிய தேவதைமுருகன், தானி யம்துவரை, வஸ்திரம்சிவப்பு, புஷ்பம்சண்பகம், ரத்தி னம்பவழம், உலோகம்செம்பு.

புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெரு கும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரிகட லை நிவேதனம் செய்து விஷ் ணு சகஸ்ரநாமம் டிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதைவிஷ்ணு, தானியம்பச்சைப் பயிறு, வஸ்திரம்பச்சைப்பட்டு, புஷ்பம்வெண் காந் தள், ரத்தினம் -பச்சை, உலோகம்பித்தளை.

வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நந்நாள் இந்நாளில் விர தம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தி யாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடு ம்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக் கும். குரு பகவானின் தேவதைருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானி யம்கொண்டக் கட லை, வஸ்திரம்மஞ்சள், புஷ்பம்முல்லை, ரத்தினம்கனகபுஷ்பராகம், உலோகம்தங்கம்.

வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படு கிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான் ,தொல்லை கள் நீங்கி, நல்லவை நடக்கும். வெள்ளிக் கிழமை யன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய் வது நல்ல பலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதைவள்ளி, தானியம்வெள்ளை மொச்சை, வஸ்திரம்வெண்பட்டு, புஷ்பம்வெண்தாமரை, உலோகம்வெள்ளி, ரத்தினம்வைரம்.

சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதக த்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரை யாண்டு சனி இருந்தாலும், சனிக்கி ழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனி பகவானு க்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம்எள், வஸ்திரம்கருப்பு வஸ்திரம், ரத்தினம்நீலம், புஷ்பம்கருங்குவளை, உலோகம்இரும்பு.

ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப் பயோகம் உள்ளவர்களும் ராகுவிரதத்தை அனுஷ் டிக்கலாம். செவ் வாய்க்கிழமை துர்க்கைக்கு இலு ப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தார மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதைபத்ரகாளி, தானியம்உளு ந்து, ரத்தினம்கோமேதகம், வஸ்திரம்கருப்பு வஸ்திரம், உலோகம்கருங்கல், புஷ்பம்மந்தாரை மலர்.

கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களு ம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக் கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழி பட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேது விற்குரிய தேவதைவிநாயகர், தானியம்கொள்ளு, வஸ்திரம்பலகலர் கலந்த வஸ்திர ம், ரத்தினம்வைடூரியம், புஷ்பம்செவ்வல் லி, உலோகம்துருக்கல்.


No comments:

Post a Comment