Sunday 12 August 2012

சீன ஜோதிடம் படைப்பாளி ஆடு

படைப்பாளி ஆடு
நேரம் மதியம் 1:00 முதல் 3:00 வரை
உரிய திசை தெற்குஃதென்மேற்கு
உரிய காலங்கள் கோடை காலம்ஃஜூலை மாதம்
நிலையான மூலகம் நெருப்பு
யின்ஃயாங் யின்

http://www.animalwebguide.com/Domestic-Goat-1.jpgகடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை முதல் ஏழு இடங்களில் வந்தன. குதிரை வந்து சேர்ந்த பின், ஆடு, குரங்கு, சேவல் மூன்றும் கடவுளர்களின் கண்களில் தென்பட்டன. இம்முன்று விலங்குகளிளும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டே கரையை வந்து சேர முயன்றன. சேவல் ஒரு மரப் பலகையைக் கண்டுபிடித்து, மற்ற இரண்டு விலங்குகளையும் அதில் ஏறச் செய்து அழைத்து வந்தது. வழியில் இருந்த புதர்களில் பலகை மாட்டிக் கொண்ட போதெல்லாம் குரங்கும், ஆடும் அதை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்து, இறுதியில் கரையை வந்தடைந்தன. கடவுளர்கள் அவற்றை வாழ்த்தி வருடச் சக்கரத்தின் எட்டாவதுச் சின்னமாக ஆட்டைத் தெரிவு செய்து குரங்கை ஒன்பதாவதாகவும், சேவலை பத்தாவதாகவும் அறிவித்தார்கள் என்பது கதை.

இந்தக் கதை ஆடு ஏன் எட்டாவதாக வந்தது என்பதைக் குறித்துக் கூறப்படும் கதை.

1907, 1919, 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027, 2039, 2051 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் ஆடு வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தையத் தொடர்கள்; மூலம் அறிந்திருப்பீர்கள். இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ்கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் ஆடு வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பிப்ரவரி 13,1907 - பிப்ரவரி 01,1908
பிப்ரவரி 01,1919 - பிப்ரவரி 19,1920
பிப்ரவரி 17,1931 - பிப்ரவரி 05,1932
பிப்ரவரி 05,1943 - ஜனவரி 24,1944
ஜனவரி 24,1955 - பிப்ரவரி 11,1956
பிப்ரவரி 09,1967 - ஜனவரி 29,1968
ஜனவரி 28,1979 - பிப்ரவரி 15,1980
பிப்ரவரி 15,1991 - பிப்ரவரி 03, 1992
பிப்ரவரி 01,2003 - ஜனவரி 21, 2004
பிப்ரவரி 19,2015 - பிப்ரவரி 07, 2016


இனி இந்தத் தொடரில் ஆடு வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம்.

சீன ஜோதிடத்தில் ஆடு வருடத்தில் பிறந்தவர்களே மிகச் சிறந்த படைப்பாளிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கலை நயம் மிக்கவர்களாகவும், இனிமையானவர்களாகவும், வசீகரமானவர்களாகவும் இருப்பர்.

படைப்பு, புத்திசாலித்தனம், அமைதி, சார்ந்திருத்தல் ஆகிய குணாம்சங்கள் கொண்டவர்கள். தனிமையை விரும்புபவர்கள். மனத்தின் ஓட்டத்தை ஆராய்ந்து கொண்டு இருப்பது பிடித்த விசயம். கூட்டத்தினருடன் இருப்பது பிடித்தாலும், நடுநாயகமாக இருக்க விரும்பமாட்டார்கள். அவர்களது கவனிக்கும் திறன் அவர்களை நல்ல பாதுகாவலர்களாக இருக்கச் செய்யும். அவர்கள் அடக்கமும், அமைதியும் கொண்டவர்கள். அதிக நேரத்தை தங்கள் எண்ண ஓட்டங்களை கவனிப்பதிலேயே செலவழிப்பர்.

இயற்கையில் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். அவர்கள் நற்பண்புகளைப் பெற்றிருந்தாலும், வாழ்க்கை நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள். தவறான நேரங்களில் தவறானவற்றைக் கூறி மாட்டிக் கொள்ளும் பண்பு பலரிடத்தில் இருக்கும். இருந்தாலும் அவர்களது வசீகரமும், கபடமற்ற தன்மையும் அவர்களுக்கு குறைவில்லாத நண்பர்களையும், தொண்டர்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அவர்கள் இயற்கையிலேயே சூரர்கள். கெட்டனவற்றை ஊகிக்க வல்லவர்கள். அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மையும், மன்னிக்கும் குணமும், இளகிய மனமும் கொண்டவர்கள். வெளியுருவில் அவர்கள் கற்பனையில் மதிப்பவர்களாக இருந்த போதிலும் உள்ளுக்குள் அவர்கள் மிகுந்த ஆவலுள்ள பத்திரத் தன்மையற்ற மனம் கொண்டவர்கள். அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே கடினமானதாகவும் தடுமாற்றமானதாகவும் இருக்கும்.

தங்களைச் சுற்றி அழகியப் பொருட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவர். அவர்கள் நன்முறையில் தங்களை அலங்கரித்துக் கொள்வர். சில சமயங்களில் உருவத் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தவும் செய்வர். தங்களுக்கு சிறந்த தோற்றத்தைத் தர, அதிகமாக செலவு செய்து சிறந்த உடைகளைப் பெற முயல்வர். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைப் பெற செலவு செய்த போதும், அவர்கள் செலவாழிகளாகவும் பகட்டாகவும் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எப்போதும் நடிப்பு, கைவினைக் கலைகள் போன்ற படைப்பு முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மகிழ்ச்சி அடைவர். அழகற்ற பொருட்கள் அவர்களைப் பெரிதும் பாதிக்கும். அவர்களுக்கு வீட்டில் ஆடம்பரமான அலங்காரங்கள் தேவையில்லை. அவர்களது கலை நயத்தைக் காட்டும் பொருட்கள் இருந்தாலே போதும்.

சீன ஜோதிடத்தில் அவர்கள் சமூகச் சேவகர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் உண்மையானவர்கள். கவலைக்கிடமான கதைகளை அப்படியே நம்புபவர்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளைப் புரிந்து கொண்டு மன்னிப்பதில் சமர்த்தர்கள். அவர்களைப் பற்றி பிறர் விமர்சனம் செய்வது அவர்களுக்குப் பிடிக்காத விசயம்.

உணர்வுகளுக்கு அடிமையாகிப் போனவர்கள். அடிக்கடி எதையேனும் யோசித்துக் கொண்டும், வருத்தப்பட்டுக் கொண்டும், துக்கித்தும் இருப்பார்;கள். ஆடுவாசிகளை யாரேனும் ஒழுங்குப்படுத்த வேண்டும். அவர்களது திறமையைப் பயன்படுத்த எடுத்துக் கூறிச் செய்யச் சொல்ல வேண்டும். யாரேனும் அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்ளவும் பார்த்துக் கொள்ளவும் இருக்க வேண்டும். அவர்களிடம் அடிக்கடிப் பேசி, நம்பிக்கை தர வேண்டும்.

ஆடுவாசிகள் தங்களை வாட்டும் விசயங்களை நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். நீங்கள் மெல்ல மெல்ல அவர்களிடமிருந்துத் துருவித் துருவி கேட்டு அறிய வேண்டும். எல்லா முயற்சியும் தோற்றால், அவர்களிடம் கோபமாகப் பேசினால் போதும். விசயங்கள் வெளிவந்து விடும். சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். பின் எல்லா ரகசியங்களையும் கொட்டி விடுவர்.

ஆடுவாசிகள் பல சமயங்களில் கவலையுடனே இருப்பார்கள். அவர்களை மற்றவர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். எல்லாம் நலமே என்று எடுத்துக் கூறி செயல்பட வைக்க வேண்டும். பாராட்டுக்கள் அவர்களை மகிழச் செய்யும். ஊக்குவித்தால் அவர்கள் நெடுந்தொலைவு செல்ல வல்லவர்கள்.

ஆடுவாசிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். அதிர்ஷ்டமும் உண்டு. அவர்களுக்கு சொத்து, உயில் விசயங்களில் நல்ல பலன் கிடைக்கும். கஷ்டமான சூழலிலும், ஆடுவாசிகளுக்குத் தேவையானவை எளிதில் கிடைத்துவிடும். அவர்கள் அச்சுறுத்தலின்றி தங்கள் காரியங்களைச் சரிவரச் செய்யக் கூடியவர்கள். அவர்களது பொறுமையும் சகிப்புத் தன்மையும் சமயங்களில் மற்றவர்களை பைத்தியமாகச் செய்யும். அவர்களது சமாதானச் சாக்கு தளரச் செய்து விடும். அவர்களை உடைக்கவே முடியாது.

ஆடுவாசிகள் அதிகச் செலவாளிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் பண விவகாரங்களில் அதிகம் ஈடுபடுதல் நல்லதல்ல. அவர்கள் ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் இருக்க விரும்புவர். நடைமுறைக்கு ஒத்துப்போகாதவர்கள். திறமான முடிவை எடுக்காமல் மதில் மேல் பூனையாக நிற்பர்.

ஆடுவாசிகளுக்கு இயற்கையின் மீது அதிக நாட்டமிருக்கும். நிலவொளி, ரோஜாக்கள், இனிய இசை, மெழுகுவர்த்தி ஒளி அவர்களை மயக்கும். அவர்கள் உலகத்தை அழகிய கண்ணாடி கொண்டு பார்க்க விரும்புவர். அவர்கள் எப்போதும் கடினமாக உழைக்க வேண்டி இருக்காது. நல்ல விசயங்கள் தானாகவே நடக்கும். அவர்களுக்கு மிகவும் வெளிச்சமான காற்றோட்டமான சூழல் பிடிக்கும். படைக்கும் தொழிலில் சிறந்து விளங்குவர்.

வீட்டில் மட்டுமே அவர்கள் மிகுந்த சுகத்தைப் பெறுவர். அங்கே அவர்கள் தங்கள் கலை நயத்தைக் காட்ட முடியும். ஓவியம், சமையல் கலை என்று பற்பலக் கலைகளில் ஈடுபட்டு மகிழ்வர். அவர்கள் படுக்கையைப் பெரிதும் நேசிப்பர். அங்குதான் ஓய்வு எடுத்துக் கொண்டே, தங்கள் எண்ணங்களை ஆராயலாம் அல்லவா?

பயணம் செய்யும் போதும், மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும், ஆடுவாசிகள் குழுவாகச் செல்லவே விரும்புவர். அதிக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்ல விரும்புவர்.

தொழில்
கூட்டத்துடன் நேர்ந்து வேலை செய்ய விரும்புவார்கள். அதிகாரம், பதவி அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் நேரடியாகக் கேட்டுக் கொண்டால் மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்கச் சம்மதிப்பார்கள். பூக்கடையாளர், வீட்டு அலங்கார நிபுணர், குழந்தைக் காப்பாளர், குழந்தை மருத்துவர், நடிகர், ஒளிப்பதிவாளர், சிகை அலங்காரம் செய்பவர், ஓவியர், இசையமைப்பாளர், கலை பயிற்றுவிப்பவர், வரலாற்று ஆசிரியர் போன்ற பணிகளுக்கு உகந்தவர்கள்.

தங்களுக்கான வேலை நேரங்களை அமைத்துக் கொண்டு செயல்படுவர். அவர்கள் மிக அதிகமான ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க விரும்ப மாட்டார்கள். வியாபார விசயங்களில் அவர்கள் சற்றே ஒழுங்கின்மை உடையவர்கள். அத்தனை அக்கறை செலுத்த மாட்டார்கள். குடினமான சமயங்களில் வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாமல் தவிப்பர். அவர்களது போக்கில் விட்டால் செயலைச் செவ்வனே செய்து முடிப்பர்.

ஆடுவாசிகள் உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக இல்லாத போதும், அவர்களது திறமைக்கேற்ற வேலை கிடைத்து விட்டால் அதைச் செய்வதில் தீவிரமும் பேராவலும் கொண்டு செயல்படுவர்.

உறவு
ஆடுவாசிகள் அந்தரங்கவாசிகள். அதனால் அவர்களை அறிந்து கொள்வது, புரிந்து கொள்வது மிகவும் கடினம். அவர்களாகவே எங்கே, எப்போது யாருடன் தங்களது அந்தரங்க விசயங்களைப் பகிர்ந்து கொள்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். அதனால் பெரும்பாலான ஆடுவாசிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் நேசிப்பவர்களுக்காக மிகக் கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் தாங்கள் விரும்புபவர்களை வெறுப்புக்கு உள்ளாக்க விரும்பாதவர்கள்.

ஆடுவாசிகள் குடும்பத்தில் பற்றுடையவர்கள். அவர்கள் யாருடைய பிறந்த நாளையும் மறக்க மாட்டார்கள். நீங்களும் அவர்களுடையதை மறக்காமல் இருப்பது நல்லது.

சுகாதாரம்
ஆடுவாசிகள் அமைதியாக இருக்கும் காரணத்தால், அவர்களுக்கு உடல் கோளாறுகள் மிகக் குறைவே. அவர்களது நல்ல வெளித்தோற்றம், அவர்களை எப்போதும் ஆரோக்கியமானவர்களாகவே காட்டும். அவர்கள் மகிழ்வுடன் இருக்கும் போது ஆரோக்கியம் மிக்கவர்கள். மகிழ்ச்சியின்றி இருக்கம் நேரங்களில், அதுவும் அன்புகொண்டவர்களினால் ஏற்படும் பிரச்சினைகள் வரும்போது, சோர்வுற்று நோய்வாய்ப்படுவார்கள். கஷ்டங்கள் மிகவும் சங்கடப்படுத்தும். எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடியவர்கள். சமயங்களில் அளவுக்கு அதிகமாகவும் செயல்படுவர்.

ஆடு வருடத்தைய பிரபலங்கள்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், பில் கேட்ஸ், விஜய் மால்யா, வள்ளலார், விக்ரம் சாராபாய், பிரகாஷ் படுகோன், பாடகி டி. கே. பட்டம்மாள், கவிஞர் வாலி, நடிகை மாதுரி டிக்சித், டென்னிஸ் ஆட்டக்காரர் போரிஸ் பெக்கர், விமானத்தைக் கண்டுபிடித்த ஆர்வில் ரைட், மைக்கலேன்ஜலோ, மார்க் டிவைன், நடிகர் பரூஸ் வில்ஸ், எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின்

அதிர்ஷ்ட எண்கள் 3, 4, 5, 12, 34, 45, 54

ஒத்துப் போகும் விலங்குகள் : முயல், பன்றி, குதிரை

ஒத்துப் போகாத விலங்குகள் : எலி, எருது
ஆடுவாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு ஆடு
(பிப்ரவரி 13,1907 - பிப்ரவரி 01,1908
பிப்ரவரி 09,1967 - ஜனவரி 29,1968)

குணங்கள் தெளிவு, ஆக்ரோஷம், உற்சாகம் கொண்டவர்கள். மற்ற ஆடுவாசிகளைப் போன்றல்லாது அடுத்தவரின் அனுமதியை எதிர்பார்க்க மாட்டார்கள். எப்போதும் மற்றவர்களின் நடுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வர். அவர்கள் சமூக விரும்பிகள். அதனால் அவர்களின் குடும்பம், நண்பர்கள் வட்டம் மிகவும் பலமானதாக இருக்கும்.

மர ஆடு
(ஜனவரி 24,1955 - பிப்ரவரி 11,1956
பிப்ரவரி 19,2015 - பிப்ரவரி 07, 2016)

குணங்கள் நம்பகத் தன்மை, பரந்த மனம், நம்பிக்கையால் ஊக்கம், உணர்ச்சி வசப்படும் தன்மை உடையவர்கள். நண்பர்களும் உறவினர்களும் இவர்களுடன் இருக்க பெரிதும் விரும்புவர். அதனால் குழுவில் அவர்கள் எப்போதும் சுகமாக இருப்பர். உதவி செய்வதைப் பெரிதும் விரும்புவர். அவர்களின் அந்த இரக்க குணம் பல நேரங்களில் மற்றவர்களால் சாதகமாகப் பயன்படுத்த படும். முர ஆடுகள் தங்களைப் கவனித்துத் தற்காத்துக் கொள்ள சமயம் ஒதுக்க வேண்டியிருக்கும்.

பூமி ஆடு
(பிப்ரவரி 01,1919 - பிப்ரவரி 19,1920
ஜனவரி 28,1979 - பிப்ரவரி 15,1980)

குணங்கள் கடின உழைப்பு, சுய அதிகாரம், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள். ஸ்திரமானவர்கள். நிலத்தில் கெட்டியாக கால் பதித்து நிற்பர். சுதந்திரமானவர்கள். ஊலக அநுபவம் மிக்கவர்கள். ஆனால் தன்னம்பிக்கை சற்றே குறைவு. அவர்களுக்கு வாழ்க்கையின் முக்கிய விசயம் குடும்பமே. வாழ்க்கை தரும் எதையுமே மகிழ்ச்சியுடன் ஏற்பர்.

உலோக ஆடு
(பிப்ரவரி 17,1931 - பிப்ரவரி 05,1932
பிப்ரவரி 15,1991 - பிப்ரவரி 03, 1992)

குணங்கள் பொறாமை, தற்காப்புத் தன்மை, ஸ்திரத் தன்மை உடையவர்கள். வெளித்தோற்றத்தில் உறுதியாகத் தோன்றினாலும், உள்ளத்தால் மிகவும் இளகியவர்கள். நன்கு புரிந்து கொண்ட நெருங்கிய நண்பர்கள் இதை நிச்சயம் ஆமோதிப்பார்கள். அவர்கள் கலாச்சாரத்தை நேசிப்பவர்கள். எல்லாக் கலைகளையும் உயர்வாக மதிப்பார்கள்.

நீர் ஆடு
(பிப்ரவரி 05,1943 - ஜனவரி 24,1944
பிப்ரவரி 01,2003 - ஜனவரி 21, 2004)

குணங்கள்
தன்னம்பிக்கை குறைவு, வசீகரம், ஆலோசனைகள் வழங்குவது, நேரத்தை சமயோசிதமாகப் பயன்படுத்தும் தன்மை உடையவர்கள். கவலையற்ற உல்லாசிகள். வாழ்க்கை போகிற போக்கில் செல்ல விரும்புவர். அதனால், அவர்கள் நம் அருகில் இருந்தால், மகிழ்ச்சி தரும். தாங்கள் நினைத்தது நடக்கவில்லையென்றால் மிகவும் புலம்புவார்கள். நீங்கள் ஆடு வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.

ஆடு வருடம் அமைதியும் நிதானமும் கொண்ட வருடமாக இருக்கும். ஒருவரை ஒருவர் நன்கு கவனித்துக் கொள்வர். கற்பனையும், படைப்புத் திறனும் அதிகமாக வெளிக்காட்டும். மிதவாதத்தில் ஒற்றுமை என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment