Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 248 - சனி மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


கூடியே காரிதிசை செவ்வாய்புத்தி
குணமில்லா மாதமது பதிமூன்றதாகும்
தேடியே நாள துவும் ஒன்பதாகும்
தேகமுள்ள அதன் பலனைச் சொல்லக்கேளு
பாடியே பாவையரும் வகைநாசமாகும்
பண்புடனே சத்துருவும் தனச்சேதம் பண்ணும்
வாடியே அலைந்திடுவாய் தேசமெங்கும்
வாகான தேவதையால் பிசகுண்டாமே


சனி மகாதிசையில் செவ்வாய் தன் பொசிப்புக் காலம் 1 வருடம் 2 மாதம் 9 நாள்களாகும். இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவன: மனம் விரும்பும் பாவையர் நாசமாவதுடன் பகைவரும் பலவாகிப் பெருகுவார்கள். இதனால் பெருந்தனம் விரயமடையும். தேசமெங்கும் வாடித்திரிந்திடும் நிலையுண்டாகும். நன்மை செய்யும் தேவதைகள் மாறுபட்டு நிற்பதால் பிழைகள் பலவாகப் பெருகிக் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment