Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 247 - சனி மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


காணவே காரிதிசை சந்திரபுத்தி
கனமில்லா மாதமது பத்தொன்பதாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
தோகையருஞ் சண்டையதால் துன்பம் வருங்கேடு
பூணவே பூமிமுதல் பூணாபரணங்கள்
புகன்றதொரு தனமுதல் சேதமாகும்
ஆணவே அலைச்சலது உண்டாகும்பாரு
அளவில்லா யேதுவுங்கூடிக் கொல்லும்


காரி எனும் சனி திசையில் சந்திரபகவானின் பொசிப்புக்காலம் 1 வருடம் 7 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன் கேட்பாயாக! பெண்களுடன் மனம் வேறுபட்டுச் சண்டையிடுவதால் துன்பம் நேரும். ஆண்டிருந்த பூமியும் அணிந்திருந்த ஆபரணங்களும் வெகுதனமும் விரயமாகும். மேலும் வெகுபேய்களும் வந்து கூடி மரணத்தைத் தரும் என போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment