Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 244 - சனி மகாதிசை,கேது புத்திப் பலன்கள்


ஆமென்ற காரிதிசை கேதுபுத்தி
அருளில்லா மாதமது பதின்மூன்றாகும்
போமென்ற நாளதுவும் ஒன்பதாகும்
புகழில்லா அதன் பலனைப் புகலக்கேளு
தாமென்ற தலைவலியும் கண்ரோகமாகும்
தப்பாது பாண்டுஉடன் தனம்பொருளுஞ்சேதம்
நாமென்ற சத்துருவால் முத்தண்ட முண்டாம்
நன்மையுள்ள மாதாரால் கெர்ப்பமது பாழாம்


சனி திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் அருளற்றதே. இது 1 வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும். இக்காலகட்டத்தில் ஜாதகனுக்கு நிகழும் பலன்களாவன; சிரரோகம் ஏற்படும். கண்ணோய் வரும். மேலும் வயிறு பெருத்துக் காணும். பாண்டு போன்ற நோய் உபாதை உண்டாகும். வெகுதனமும் பெரும்பொருளும் சேதமாகும். சத்துருக்களால் மூவகையில் விரயம் உண்டாகும். நன்மையே தரும் மனைவிக்கு கெர்ப்ப நஷ்டம் ஏற்படும் என்று போகரது பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment