ஆமென்ற காரிதிசை கேதுபுத்தி |
சனி திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் அருளற்றதே. இது 1 வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும். இக்காலகட்டத்தில் ஜாதகனுக்கு நிகழும் பலன்களாவன; சிரரோகம் ஏற்படும். கண்ணோய் வரும். மேலும் வயிறு பெருத்துக் காணும். பாண்டு போன்ற நோய் உபாதை உண்டாகும். வெகுதனமும் பெரும்பொருளும் சேதமாகும். சத்துருக்களால் மூவகையில் விரயம் உண்டாகும். நன்மையே தரும் மனைவிக்கு கெர்ப்ப நஷ்டம் ஏற்படும் என்று போகரது பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சனி மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment