Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 235 - வியாழன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்


உண்டாகும் வியாழதிசை புதனார்புத்தி
உண்மையுள்ள மாதமது மூவொன்பதாகும்
தென்றாகும் நாளதுவும் ஆறதாகும்
தெருட்டாத அதன்பலனை தென்புடனேகேளு
உண்டாகு மலைபோலே பெருகுஞ்செல்வம்
குறைவில்லா மாதர் மைந்தர் கட்டுடனே வாழ்வான்
சென்றாகும் திருவுடனே பட்டங்கட்டும்
திருவான லெட்சுமியும் சேர்வள்பாரே


வியாழ மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். அக்காலகட்டத்தில் ஏற்படும் பலாபலன்களாவன: மலைபோலச் செல்வமானது பெருகிக் காணும். குறைவில்லாத மனைவியுடனும் குழந்தைகளுடனும் கட்டுக்கோப்பான நல்வாழ்வினைச் சாதகன் பெறுவான். வெகுதனமும், பெரும் புகழும் கொண்டு அரச சம்பத்தும் பட்டம் பதவிகளும் பெறுவதோடு இவனது மனைவியில் திருமகள் நிலை கொண்டு உறைவாள் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment