Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 194


சூடப்பா இன்னமொரு சூச்சமங்கேளூ
சுகமுள்ள ஜென்மனுட ராசிதன்னில்
மாடப்பா மதிமயங்கி ஒளிவில்லாமல்
மகத்தான கோள துதா னீசமோ
கூடப்பா குடினாத னம்புலிக்கு
கொற்றவனே கேந்திரமு முச்சமாக
நாடப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாக செப்பிடுவாய் நீசம்போச்சே.


வேறொரு சூச்சுமத்தையும் உனக்கு உணர்த்துகிறேன் தெளிவாகக் கேட்பாயாக! நற்சுகம் உடைய சாதகனின் ஜென்மராசி தன்னில் சந்திரன் முதலிய கிரகங்கள் மயங்கி நீச்சமே அடைந்திருப்பினும் இலக்கினாதிபதிபன் சந்திர கேந்திரமோ உச்சமோ அடைந்திருப்பின் இதனால் ஏற்படும் யோகம் நீசபங்க ராஜயோகம் என நிகழ்த்துக என்ற போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment