Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 193


தானென்ற சந்திரனான் வியத்திலோ
தவத்தாலே வந்ததொரு இலங்கை வேந்தன்
கோனென்ற இராமன்கை அம்பால் மாண்டான்
குவலயத்தில் சென்மனுக்கு கொடுமைமெத்த
மானென்ற மறலிபயம் பொருளுஞ் சேதம்
மைந்தனே அரிட்டங்கள் வந்துகூடும்
ஊனென்ற போகருட கடாட்சத்தாலே
உத்தமனே புலிப்பாணி உரைத்தேன் காணே


தன்னிகரற்றவனான சந்திரனுக்குப் பன்னிரண்டாம் இடத்தைக் கோட்சாரத்தில் பெற்ற போதிலேயே இலங்கை மன்னன் இராவணன் இராமன் கைக்கருணையால் மாண்டான். இப்படிப்பட்ட சாதகனுக்கு மிகவும் கொடுமை நேரும். மரண பயம் உண்டாகும். பொருட்சேதம் பெருகிக் காணும். பலவிதத் துன்பங்கள் வந்தடையும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment