Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 190




சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா
சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே
அல்லப்பா அகிலங்கள் வினையினாலே
அப்பனே ஆரணியம் சென்றாரவர்
நல்லப்பா நாலதனில் குருவுமேற
நரச்சுகமுங் கிட்டாது நலிவுமுண்டு
மல்லப்பா மண்ணாலும் பொன்னால்வேதை
மகத்தான குருபதியின் கடாட்சத்தாலே.


வேறொன்றையும் உன் மனங்கொள்ளும்படி கூறுகிறேன். சற்று கவனமாகக் கேட்பாயாக! என்றும் சுகத்தையே அனுபவிக்கும் வாய்ப்புடைய பஞ்சபாண்டவர்கள் வினைப்பயனின் காரணமாகச்சூதாட்டத்தில் நாடு நகரங்களை எல்லாம் இழந்து அடிமையாகி அடவி சென்றாரன்றோ? அதன் காரணம் என்னவெனில் கோட்சாரத்தில் குருபகவான் 4-ஆம் இடம் அடைந்தாலன்றோ? மனிதரால் சுகமும் இவர்களுக்குக் கிட்டுதல் இல்லை. வெகு துன்பம் விளையும். பூமியினாலும் பொன்னாபரணங்களாலும் வழக்கத்திற்கு மாறான துன்பங்களை ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment