Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 187


பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பரமகுரு ஜென்மத்தில் வந்தபோது
கூறப்பா கோதண்டபாணி வீரன்
கொற்றவ குடியேறிப்போகச் செய்தார்
சீரப்பா ஜென்மனுக்கு வேதைமெத்த
சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்
வீரப்பா வேந்தனுட தோஷமுண்டு
விளம்பினேன் கோள்சார வினையைக்கேளே.


மற்றும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன் இதனையும் நன்கு கேட்பாயாக! பிரசித்தனான குருபகவான் கோச்சாரத்தில் ஜன்மத்துக்கு வருவானேயால் அவனால் துன்பமே விளையும். கோதண்டராமன் வனவாசம் சென்றாலும் இவனால் தான். செம்பொன் விரயமாகும். அரசர்களுடைய கோபமும் இச்சாதகருக்கு விளையும் என்று கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment