Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 185


பாரப்பா யின்னமொரு செயலைக்கேளு
பால்மதியைப் பெரியோர்கல் நீசம்பெற்று
கூறப்பா கொடுங்கண்ணால் நோக்கினாலும்
குவலயத்தில் செடிமறைவில் ஜெனித்தபிள்ளை
ஆரப்பா அசுபர்களும் நீசம் பெற்று
அம்புலியை அரைக்கண்ணால் நோக்கினாலும்
நீரப்பா நீச்சரில்லு வாசல்திண்ணை
நிலவரமாய்ப் பெற்றெடுத்த சிசுதான் சொல்லே.


மேலும் இன்னொரு செயலையும் நீ கேட்பாயாக! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை பெரியோர்கள் என்று கூறப்படும் சுபக்கிரகங்கள் நீசம் பெற்றுப் பார்ப்பானாகில் அச்சாதகன் இந்நிலவுலகில் செடிமறைவின் கண் செனித்த பிள்ளை அவனேயாவான். அதேபோல் அசுபர்களும் நீசம் பெற்று சந்திரனைப் பார்த்தாலும் அச்சாதகன் கருங் கல்லால் ஆன வாசல் திண்ணை ஆகிய இடத்தில் பெற்றெடுத்த சிசு அவனென்று கூறுக. எனப்போகப் மாமுனிவரின் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment