Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 175


நடித்திட்டேனின்னமொன்று நாட்டக்கேளு
நரக்குருவும் அசுரகுரு அனலன்பின்னால்
படித்திட்டேன் பலகவியும் நூல்கள் கற்போன்
பலமான வித்தையென்று புவியில் வாழ்வான்
இடித்திட்டேன்யெட்டுபத்து யெட்டு ஆண்டில்
ஈசன் லபி முடியுமடா சிசுவுக்கேதான்
குடித்திட்டேன் குழவிக்கு பாலையோகம்
குணமாக புலிப்பாணி அறைந்திட்டேனே.


நான் இன்னொரு கருத்தையும் உனக்கு நாட்டமொடு கூறுகிறேன் கேட்பாயாக! தேவகுருவும், அசுரகுருவும் சூரியனுக்குப் பின்னே நிற்க. அச்சாதகன் வெகுவான கவிகளையும் படிக்கவல்லவன். மேலும் பன்னூல் பயிற்சியுள்ளவன்; வித்தையில் மிகவும் விற்பன்னன். பூமியில் நீண்ட நாள் வாழ்வான். 88 ஆண்டுகளில் சிவபதம் அடைவது எம்பெருமானான ஈசன் செயல் என்றும் இது பாலை யோகம் எனப் பகரப்படும் என்றும் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பகர்ந்தேன்.

No comments:

Post a Comment