Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 167




புகழ்கின்ற ஈராறு யிருநான்கேழில்
புனிதமுள்ள சனிரெண்டு நான்கில்நிற்க
இகழ்கின்ற வாதநோய் நாய்கடிக்கும்
இதமுள்ள அன்னைக்கி கண்டம்நான்கில்
நிகழ்கின்ற ரெண்டேழில் மனைவிநஷ்டம்
நிசம்சொன்னோம் யெட்டுக்கு உயிர்க்குசேதம்
மகிழ்கின்ற ஈராறில் விரையமாகும்
துலையுமடா மாடாடு துன்பஞ்சொல்லே.


எல்லாராலும் புகழப்படும் 12,8,7,2,4 ஆகிய இடங்களில் பரிதிமைந்தனாகிய சனிபகவான் நிற்க ஏற்படும் பலன்களாவன: நான்கில் நிற்பின் அன்னைக்குக் கண்டம், வாதநோய் உண்டாம். நாய் கடிக்கும் என்றும் 2,7 ஆகிய இடங்களில் நிற்க அவனால் மனைவி நஷ்டம் மற்றும் 8-இல் நிற்க உயிர்க்குச் சேதமும் 12-இல் நிற்க கன்று காலிகள் நஷ்டமாதலால் விரயமும் துன்பமும் உண்டாம் என்று கூறுவாயாக! போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment