Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 151


பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பஞ்சமத்தில் கருநாகம் அமைந்து நிற்க
சீரப்பா செங்கதிரோன் பார்த்திட்டாலும்
ஜென்மனவன் பரதேச வாசஞ்செய்வான்
ஆரப்பா அகம்பொருளும் நிலமும்கிட்டும்
அப்பனே அவன்பிதாவை யிசபைபண்ணான்
கூறப்பா குமாரனுக்கு அறுபத்தஞ்சில்
கூற்றுவனார் தெரியாணஞ் சாற்றினேனே.


இன்னுமொரு கருத்தையும் கூறுகிறேன் கேட்பாயாக! ஐந்தாம் இடத்தில் இராகு என்னும் கரும்பாம்பு அமைந்து நிற்க அவனை சூரியன் பார்த்திட அச்சென்மன் பிறந்த இடத்தை விட்டு பரதேச வாசஞ் செய்பவனாவான். அவனுக்கு மனையும், பொருளும், நிலமும் கிட்டும். அச்சாதகன் தன் பிதாவை எண்ணிப்பாராதவனே. இச்சாதகனுக்கு இவரது 65 வயதில் இயமானால் நிராயணம் ஏற்படும் என்றும் போகரது அருளாணையால் புலிப்பாணி சாற்றினேன்.

No comments:

Post a Comment