தெரிந்த விசயங்களை விட
தெரியாத விசயங்களை
தெரிந்து கொள்ளவே
எண்ண அலைகள்
ஆர்ப்பரிக்கிறது..
எதற்கென்று
தெரியாத போது
இருந்த ஆர்வம்
அதற்கென தெரிந்ததும்
அடக்கமாகி விடுகிறது..
தெரியாதவற்றை
தேடித் திரியும் போது
தெரிந்து கொள்ள
தேவையில்லாதவற்றையும்
தெரிந்து கொள்ள முடிகிறது..
தெரியாதவைகள
தெரிந்து கொள்ளும்போது
தெரிந்தவைகளில் சில
தெரியாமல் போகிறது..
தெரியாதவை
எவையென
தெரிந்து கொள்ள
தெரியாமற் போகிறது..
தெரியாதவை
எது எனக் கேட்டால்
தெரியவில்லை..
அவைதான்
தெரியாதவை ஆயிற்றே..
...................................................
No comments:
Post a Comment